tamilnadu

img

கைகளைத் துண்டிப்போம் என்று மிரட்டிய பாஜக தலைவர்

சிம்லா, ஏப்.25-பிரதமர் மோடியையோ, பாஜக தலைவர்களையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கைகளை துண்டிப்போம் என்று இமாச்சலப்பிரதேச மாநில பாஜக தலைவர்சத்பால் சிங் சத்திமிரட்டல் விடுத்துள்ளார்.இமாச்சலப்பிரதேச மாநிலம் மாண்டியில் நடந்த தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில்தான் இவ்வாறு அவர் பேசியுள்ளார். சத்பால் சிங் சத்தியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அண்மையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து மோசமான முறையில் பேசியதற்காக, சத்பால் சிங் 48 மணிநேரம் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. தற்போது மீண்டும் சத்பால் சிங் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

;